செண்பகம்பேட்டை டோல்கேட்…விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் … டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்
திருப்புத்தூர் அருகே, விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, செண்பகம்பேட்டை டோல்கேட்டை அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டியில் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டோல்கேட்டில் இதுவரை விவசாயப் பயன்பாடு டிராக்டர்களுக்கு கட்டணம் ஏதும் வாங்கப்படுவதில்லை. நேற்று முன்தினம் அந்த வழியாக டிராக்டர் ஓட்டி வந்த நபரிடம், டோல்கேட்டை கடந்து செல்ல ரூ.260 கட்டணம் செலுத்த வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். […]