டில்லி- சென்னை நோக்கி வந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து
டில்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் சிந்தி ரயில் நிலையல் வந்து கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 11 மணியளவில் வர்தா என்ற இடத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து – துல்ஜாபூர் இடையே ரயில் நிறுத்தப்பட்டு, தீப்பற்றிய பெட்டி நீக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டெல்லி – சென்னை ஜி.டி. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தினால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் […]
செல்வபெருந்தகை டில்லிக்கு அவசர பயணம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். கூட்டணி குறித்து பேச குழு அமைத்த பின்னர், இணக்கத்தை சிதைக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வரும் நிலையில் மாணிக்கம் தாகூருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதத்துடன் செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார்.
டில்லியில் புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு…
டில்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தி குடியிருப்பு வளாகத்தையும் திறந்து வைத்தார். பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய வளாகங்களுக்கு புதிய பெயரை அறிமுகப்படுத்தினார். பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவற்றைக் கொண்ட வளாகத்திற்கு பிரதமர் […]
டில்லி- 500 புதிய மின்சார பேருந்தின் சேவையில் மோசடி…அம்பலம்
டில்லியில் 500 மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலான பேருந்துகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது அம்பலம் ஆகி உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் கடந்த வாரம் 500 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனை அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களே வீடியோ மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர். […]
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டில்லி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான சோதனையின் முடிவில், அங்கு வெடிபொருட்கள் எதுவும் […]
டில்லியில் ஆசிரியர்கள் பேரணி- தமிழக ஆசிரியர்கள் பங்கேற்பு
டெல்லியில் நடந்த ஆசியர்கள் கூட்டமைப்பின் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து புதுகை மாவட்டம் அரிமழம் ஓணாங்குடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்க. விஜயலட்சுமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க? – பிரேமலதா டென்ஷன்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 26 குடியரசுத் தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தேமுதிகவின் அரசியல் செல்வாக்கு மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்து பேசும் வகையில் அமைந்துள்ளது. குடியரசுத் தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது தவெகவின் வளர்ச்சியையும், தேசிய அளவில் கட்சிக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும் காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி குறித்து தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, “எங்கள் கட்சிக்கும் எதிர்காலத்திற்கும் எது […]
சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்
சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணம் என்று கூறினாலும் போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் இயக்க தாமதம் என தகவல்.
கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், இன்று காலை 10:30 மணியளவில் பின்வரும் 4 நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்: புஸ்ஸி என். ஆனந்த் (தவெக பொதுச்செயலாளர்) ஆதவ் அர்ஜுனா (தவெக மாநிலத் துணைப் […]
வரும் 27ம் தேதி டில்லியில் காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்
வரும் 27ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்தும் அன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் மசோதா இன்று மக்களவையில் நிறைவேறிவிடும். நாளை மாநிலங்களவையிலும் நிறைவேறிவிடும். அது உடனடியாக சட்டமாகவும் மாறிவிட வாய்ப்பு உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த […]