வேகமாக ஓட்டுவதைத் தட்டிக்கேட்ட பயணிக்கு அடி உதை – தனியார் பேருந்து ஓட்டுநரின் அராஜகம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் நோக்கிச் சென்ற ‘சங்கர்’ என்ற தனியார் பேருந்தை (TN 45BP 5345), எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து மிகவும் அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர், “இவ்வளவு வேகமாக ஓட்டாதீர்கள், பயமாக இருக்கிறது. இல்லையென்றால் என்னை இறக்கிவிடுங்கள்” என்று ஓட்டுநரிடமும் நடத்துநரிடமும் கூறியுள்ளார். ஆனால், ஓட்டுநர் அன்புராஜ் வேண்டுமென்றே மேலும் ஆபத்தான முறையில் […]