தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை […]
வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் நாடகமா?– இபிஎஸ் கேள்வி!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது வெற்று அறிவிப்புகள் மற்றும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரை” என்று குற்றம் சாட்டினார். உருப்படியாக எதுவும் இல்லை என்றும், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “2021 தேர்தலில் திமுக […]
வேலூரில் பிப்.23ம் தேதி விஜய் பிரசாரம்
சேலத்தைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அந்த பரப்பரைக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதில் சேலம் கூட்டம் போலவே சுமார் 5000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்நிலையில் வேலூரில் விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார். பிரச்சார திடலில் பொதுமக்கள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகன பார்க்கிங், பிரச்சாரத்திற்கு வந்து, செல்லும் வழி குறித்தும் […]
வேலூர்- மயான கொள்ளை திருவிழாவில் 60 அடி உயர தேர் சரிந்து விபத்து
வேலூர் மாவட்டத்தில் முக்கிய விழாக்களில் ஒன்றான மயான கொள்ளை விழா வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் எடுத்து பாலாற்றுக்கு அழைத்து வந்து சூரையாடி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் […]
இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய லெஜெண்ட் கடிதம்
பாக்., EX PM இம்ரான் கான் கண் பார்வை பாதிப்பால் சிறையில் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கவும், மனிதாபிமான முறையில் சிறையில் நடத்தவும் பாக்., அரசுக்கு 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்தியாவின் கபில்தேவ், கவாஸ்கர், கிரேக் சேப்பல் (AUS), கிளைவ் லாயிட்(WI) உள்பட 14 கிரிக்கெட் வீரர் கையெழுத்திட்டுள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவங்களின் விகிதம்: தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செல்படுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் […]
மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு… சுப்ரீம் கோர்ட் கவலை
டில்லி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அதிகரிக்கும் ஏ.ஐ. பயன்பாடு குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் நாகரத்னா, பாக்சி அமர்வு கவலை தெரிவித்துள்ளது. ஏ.ஐ. மூலம் போலியான வழக்கு தீர்ப்பு, நீதிபதியின் கருத்துகளை பயன்படுத்தி மனுக்கள் தயாரிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது. ‘அண்மையில் மெர்சி வழக்கு என்று ஒரு வழக்கை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மெர்சி என்ற ஒரு வழக்கே கிடையாது, ஆனால் ஏ.ஐ. பயன்படுத்தி அப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சில […]
இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளதாக இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில் […]
FC புதுப்பிக்க 10 மடங்கு உயர்வு… 25ம் தேதி லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் 10 மடங்கு உயர்த்தியுள்ளதை கண்டித்து வரும் 25-ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில் இன்று (17-2-2026) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் திரு தன்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி மற்றும் பேருந்துகளுக்கு […]
ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியில், அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன். இருவரும் பேசி் சுமூக தீர்வு காண்பார்கள். காங்கிரசில் சிலர் கூறும் சொந்த கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. விசிக ஆட்சி அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் கைவிடவும் இல்லை. ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதன் மூலம் திமுக கூட்டணியில் […]