தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டித்வா புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
SIR பணிக்கு எதிர்ப்பு…தமிழகம் முழுவதும் தவெக சார்பில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழகம், மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நவம்பர் 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அதற்கான பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தவெக இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து போராடி வருகின்றன. அந்த வகையில், வாக்காளர் பட்டியல் […]
SIR-க்கு எதிராக 11ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..
மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தோழமைக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று தில்லை நகர் திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி தலைமையில்,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல் .ஏ,மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் […]