தருமபுரி அருகே பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி டேம் ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் என்பவர்களுக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு மாசிலாமணி என்ற தொழிலாளி வழக்கம்போலப் பட்டாசு தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டாசுகள் திடீரெனத் தீப்பற்றிப் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளி மாசிலாமணி உடல் கருகிப் படுகாயமடைந்தார். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
தருமபுரி , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கும், ஒவ்வொரு நனைப்பும் முதல் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும், இரண்டாம் மண்டலத்திற்கு ஐந்து நாட்களுக்கும் ஆக 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விட்டும் 5 நாட்கள் நிறுத்தியும் மொத்தம் 55 நாட்களுக்கு 06.02.2026 முதல் 01.04.2026 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு திறந்து விடவும் அரசு ஆணையிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், […]
தருமபுரியில் பயங்கரம்: வேன் மீது லாரி மோதி விபத்து…பெண் உள்பட 2 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சாவித்திரி(53), தனது குலதெய்வக் கோயில் வழிபாட்டிற்காக உறவினர்கள் 30 பேருடன் வேனில் சேலம் நோக்கிப் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி – சேலம் பைபாஸ் சாலையில், தருமபுரி தடங்கம் நீதிமன்றம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்டது. அப்போது, ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதிச் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் […]
கார், பைக் மீது லாரி மோதல்… 4 பேர் பலி
தர்மபரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு […]