சட்டமன்ற தேர்தலை வைத்து-வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது
சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸ், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக 4 பேர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள மாதிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, […]