தாறுமாறாக ஓடி பெட்டிக் கடைக்குள் புகுந்த மினி பஸ்..கோவையில் பரபரப்பு

கோவை, கணுவாய் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து, அங்கு இருந்த பொதுமக்களையும், பயணிகளையும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை வரை செல்லும் மினி பேருந்து ஒன்றின் ஓட்டுநராகச் சிவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று காலை கணுவாய் பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஓட்டுநர் சிவராஜ் பேருந்தில் இல்லாத நேரத்தில், அந்தப் பேருந்தின் நடத்துனருக்குத் திடீரென பேருந்தை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்து உள்ளது. […]