திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்து..3 பேர் பலி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எழுத்தூரில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி அருகே சாலை விபத்து…9 பேர் பலி

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில்சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில், பஸ் தறிகெட்டு ஓடி விபத்தில் சிக்கியது. அது தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் சென்று, எதிரே வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். […]