திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைத் தரக்குறைவாகப் பேசி சர்ச்சையில் சிக்கி வந்தவர். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் (பின்னர் 2024-ல் மீண்டும் சேர்க்கப்பட்டார்). இது தொடர்பான […]