குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு
கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த சிவத்தலத்தில், இன்று சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த விழாவையொட்டி, நந்தி பெருமானுக்குப் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. […]
வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்
திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காவடி எடுத்தல், பால்குடம் சுமந்து வருதல் மற்றும் அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் […]