SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு…
SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி தலைவர் NMJ நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்குமாநில பொருளாளர் முஸ்தபா மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் […]
தமிழ்நாட்டில் 2 கார் தொழிற்சாலைகள் திறப்பு-டிஆர்பிராஜா தகவல்
6 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் 2வது கார் தொழிற்சாலை திறக்கப்படுவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஏற்கனவே வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்பட்ட நிலையில் இன்று டாடா மோட்டார்ஸ் ஆலை திறக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ், வின்பாஸ்ட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2 ஆண்டுக்குள் ஆலைகள் திறக்கப்படுகின்றன. இதுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் வேகம்,”இவ்வாறு தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்.. ரூ. 25 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளையும்திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் […]
புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலைப்பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் ரூ1.20கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து […]
பிப்.6ம் தேதி ரூ. 360 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு- அமைச்சர் மாசு தகவல்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்தொடங்கி வைத்து முகாமின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் குமாரவேல், மருத்துவம் மற்றும் ஊரக […]
அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி
திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்குச் சொந்தமான புதிய ஹோட்டல் திறப்பு விழா பணிகளின் போது, மின்சாரம் தாக்கி விழுந்த ஐ.டி.ஐ மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் புதிதாக ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் […]
தஞ்சை- 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் திறப்பு
வல்லம், டிச.24- தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோவில் பகுதி 11 ல் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட […]
திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை, குத்துவிளக்கு ஏற்றி எம்.எல்.ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 51 நியாய விலை […]
புதுகை -அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என பெயரிடப்பட்ட புதிய அலுவலகத்தை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்வில் மாநில திமுக. மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி, ஒன்றிய செயலாளர்கள் பொன். ராமலிஙகம், இளையராஜா, பேரூராட்சி தலைவர் மாரிக்கண்னு முத்துக்குமார், முத்துக்குமார், நகரம் நாசர், ஒன்றிய துணைச் செயலாளர் முன்னாள் சேர்மன் மேகலா முத்து, […]
கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு
ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும் SPCA தலைவருமான திரு. பவன் குமார் கிரியப்பனவர், ஐ.ஏ.எஸ்., திறந்து வைக்கிறார். இவ்விழாவுடன் இணைந்து RID 3206 ரோட்டரி கிளப்புகள் சார்பில் விலங்குகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கப்படுகிறது. சமூக விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் […]