திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- விசாரணை நிறைவு- தீர்ப்பு தள்ளிவைப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றுறு 5-வது நாளாக […]

தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது, இந்து முன்னணி அமைப்பினர் அங்கு தொழுகை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ’ஆடு, கோழி பலியிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை; உரிமையியல் நீதிமன்றத்தில் போய்தான் நிவாரணம் பெற முடியும்’ என்றும் அவர்கள் கூறினர்; இதே கருத்துதானே தீபம் ஏற்றுவதற்கும் பொருந்தும். இந்த […]