ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை… துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயச்சோட்டியைச் சேர்ந்த பானு பிரகாஷ் ரெட்டி, தெலுங்கானாவில் 2020 பேட்ச்சை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, அவர் அம்பர்பேட்டை காவல் நிலையத்தில் (துப்பறியும் எஸ்.ஐ.) யாக பணியில் சேர்ந்தார். இருப்பினும், கடந்த சில நாட்களில், அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார். இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடனில் சிக்கினார். இதன் காரணமாக, அவர் ஒரு திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட 8 சவரன் தங்கத்தை எடுத்து விற்று பணம் பெற்றார். […]