தேமுதிக விருப்ப மனு அளித்தவர்களுக்கு பிப்.20 முதல் நேர்காணல்
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிப்.20 முதல் 22ம் தேதி வரை 3 நாள்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிர்வாகியின் மிரட்டல் பேச்சு- பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மேடையில் பேசிய விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிர்வாகி மாரி, “கோவம், […]
தேமுதிகவில் நாளை முதல் விருப்பமனு விநியோகம்
தேமுதிக சார்பில் நாளை முதல் பிப் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவுக்கு ரூ.15,000, தனித் தொகுதிக்கு ரூ.10,000 கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப்.12ம் தேதி மாலை 5 […]
அதிமுகவுடன் இணையும் தேமுதிக?- 14 இடங்கள் கேட்பதாக தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. மரியாதை கிடைக்கும் இடத்திலேயே கூட்டணி அமைக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து தொகுதி உடன்படிக்கை […]
தேமுதிகவிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்குறீங்க? – பிரேமலதா டென்ஷன்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 26 குடியரசுத் தினத்திற்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தேமுதிகவின் அரசியல் செல்வாக்கு மற்றும் மத்திய அரசுடனான உறவு குறித்து பேசும் வகையில் அமைந்துள்ளது. குடியரசுத் தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தது தவெகவின் வளர்ச்சியையும், தேசிய அளவில் கட்சிக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும் காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. கூட்டணி குறித்து தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, “எங்கள் கட்சிக்கும் எதிர்காலத்திற்கும் எது […]
தமிழ்நாட்டில் NDA கூட்டணி முழு வடிவம் பெறவில்லை- பிரேமலதா
தற்போது வரை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் வகையில் தேமுதிக நல்ல முடிவை அறிவிக்கும். என்.டி.ஏ.வுடன் இன்னும் பல கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன, இறுதியாகவில்லை என்பதுதான் உண்மை. கூட்டணி அமைக்க இன்னும் நேரம் இருக்கிறது; தேமுதிக என்ற குழந்தைக்கு ஒரு தாயாக எனது கடமையைச் செய்வேன்”, என்று இவ்வாறு தெரிவித்தார்.
தேமுதிக, தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா..? சரத்குமார் மழுப்பல் பதில்
சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று வரை பியூஷ் கோயலை, பாஜகவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து வந்தனர். அந்த வகையில், நடிகரும், பாஜகவை சேர்ந்த நிர்வாகியுமான சரத்குமார் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், கட்சித் தலைமை உத்தரவிடுவதை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறினார். அவர் பேசுகையில், “பாரதிய ஜனதா […]
தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்-பிரேமலதா பேட்டி
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் நூற்றுக்கணக்கான தேமுதிக நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். காலை […]
தேமுதிக தலைவர் கேப்டனின் 2ம் ஆண்டு குருபூஜை.. அன்னதானம்
தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை… கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 ஆவது வட்டக் கழகத்தில் வட்டக் கழக செயலாளர் சிட்டி கே ராமச்சந்திரன் அழகுராணி ஏற்பாட்டில் கேப்டன் திருவுருவப்படம் வைத்து பூஜைகள் செய்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது […]
யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற “மக்களைத் தேடி மக்கள் தலைவர்” நிகழ்ச்சியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என உறுதியாக அறிவித்தார். காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பெரியார் சிலை பகுதியிலிருந்து ரோட் ஷோவுடன் அவர் வரவேற்பைப் பெற்றார். பிரேமலதா, “2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். […]