மலைக்கோட்டையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி ஐயப்ப பக்தர்கள்

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலையணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். கார்த்திகை முதல் நாளான இன்று ஐயனுக்கு விரதம் தொடங்க உகந்தநாள் என்பதால், இந்த ஆண்டு ஒருமண்டல் விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சந்நதியின் முன்பு காவி வேட்டியுடுத்தி, துளசிமணி மாலையணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் சந்நதி, மற்றும் கண்டோன்மென்ட் ஐயப்பன் கோவில்களில் அதிகாலை முதலே […]