கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்து கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். கரூர், ஜவகர் பஜார் பகுதியில் கைராசி ஜூவல்லர்ஸ் என்ற தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தரை பூர்வீகமாகக் கொண்ட கந்தசாமி என்பவர் இந்த நகைக்கடையை நடத்தி வந்துள்ளார். கரூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நகைக்கடை செயல்பட்டு வந்துள்ளது. கரூர் நகரம் […]