திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக மாணவ, மாணவிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும், மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம், தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஒத்திகையை நடத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டது. மாணவியின் […]
பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரவீன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர், வெட்டுக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்தி (19). இவர் பைக் மெக்கானிக்காகப் பணியாற்றி […]
நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
திருச்சியிலிருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம், இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி நோக்கிச் சென்ற லாரியும், அந்தச் சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் மீது சரக்கு வாகனம் […]