புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (ஜனவரி 28, புதன்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு, நாளை ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவிரி கரையில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. இவ்விழாவின் மிக முக்கிய நிகழ்வான ‘ஆராதனை விழா’ வருகின்ற ஜனவரி 7-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு, இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் […]

விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள்… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டித்வா புயல் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (29-ந்தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]