தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இன்று 14-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. இன்று கருப்பு உடை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட கன்வீனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கனகலெட்சுமி, வித்யா, ஜெயசீலி,தீபா, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ் தொடக்க […]
நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 181-இல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் […]