அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திருமங்கையாழ்வார் அருளிசெய்த பெரிய திருமொழியின் தொடக்கப் பாசுரமான “நாராயணா என்னும் நாமம்” செவிமடுக்க, திருநாராயணன் ஆனந்தமாக சேவை சாத்திக்கொண்டார். இச்சேவையில், திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய் அணிந்து, சிகப்புக் கல் அபய ஹஸ்தம், மகர […]