பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இந்த சத்தம் உணரப்பட்டது. உடனடியாக மாணவிகள் அனைவரும் வகுப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி கல்லூரி விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்றனர்.கல்லூரியில் […]