பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து: பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காரில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், கார் பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்பகுதியில் இருந்து புகை வந்து தீப்பற்றத் தொடங்கியது. தீ மளமளவென பரவுவதைக் கண்ட காரில் இருந்த பயணிகள் அனைவரும், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் […]