ஒழுங்கா தீர்ப்ப சொல்லனும்… நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியவர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்- தங்க முனீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாசம் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது அங்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து பாலமுருகன் உள்ளே வீசி உள்ளார். அப்போது வழக்கறிஞர் அமரும் இடத்தில் […]

திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை யில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா(23) இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவை பெற்றோர் சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.கடந்த 11ஆம் […]

செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த தவெகவினரால் பரபரப்பு

சேலம் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்க முயன்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் மயக்கமடைந்தவர்கள் விவரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்கம் முற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நியூஸ் தமிழ் செய்திக்குழுவின் வாகனம் மீது ஏறி நின்று சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுப்பட்ட தவெகவினரால் பரபரப்பு […]

விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக – பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு […]

நிலத்தகராறு..ஓய்வு எஸ்ஐ, 2 மனைவிகள் மீது தாக்குதல்.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவிகள் சித்ரா(50), குணவதி(52). பன்னீர்செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் எதிரே 11 சென்ட் நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்று அதே பகுதியை சேர்ந்த ரவியும் அவரது மகன் அருள்பிரசாத்தும்(32), பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பன்னீர்செல்வம் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் சில மாதங்களுக்கு முன் கற்களை […]

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி… 2 பேர் பலி

சென்னை பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணையில் ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த செபாஸ்டின் கேக்கில் விஷம் தடவி மனைவி, 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் […]

நடு ரோட்டில் மோதிக்கொண்ட வடமாநில இளைஞர்கள்… பரபரப்பு

கோவை காந்திபுரத்தில் நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில்காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர். வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவரை மற்ற வடமாநில இளைஞர்கள் தாக்கினர்.மாறி மாறி பெல்ட்டை […]

வழக்கறிஞர் டூவீலரில் புகுந்த பாம்பு… திருச்சி கோர்ட்டில் பரபரப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கமான பரபரப்புடன் இன்று இயங்கியது.வழக்கறிஞர்கள் வழக்காடிகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு இருந்தனர். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணபதி தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்தார்.காலையில் ஒன்பது முப்பது மணிக்கு புதிய நீதிமன்ற கட்டிடம் முன்பு தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கோர்ட்டுக்குள் சென்றார் 11 மணி அளவில் அவரது ஜூனியர் பதறி அடித்துக் கொண்டு அவரை பார்க்க ஓடோடி வந்தார். அப்போது தங்களது பைக் மீது மோட்டார் […]

தாறுமாறாக ஓடிய கார்..பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை, அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 3 டூவீலர்கள் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. கார் டிரைவர் வெங்கடேசன் மதுபோதையில் ஓட்டினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

முடிதிருத்தும் தொழிலாளியை அடித்து கொன்ற 2 பேர் -பரபரப்பு

பாபநாசம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் சேர்ந்து முடி திருத்தும் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே தேவன்குடி மீனவர் காலனி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன் (50) இவரது மனைவி சரிதா (45). இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர். இளங்கோவன் முடி திருத்தம் செய்யும் பணி செய்து வருகிறார்.. தேவன்குடி அருகில் அமைந்துள்ள வீரமாங்குடி […]