பள்ளிச் சுவர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரமத்திவேலூர் அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரவீன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர், வெட்டுக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்தி (19). இவர் பைக் மெக்கானிக்காகப் பணியாற்றி […]