புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு
புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகமானது (Robotic)துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் செயல்முறை அடிப்படையிலான கற்றலின் மூலம் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கருத்துக்களை வலுப்படுத்தவும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும் குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக் கொள்ளவும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வகமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி சென்னை, கோவை ,சேலம் மற்றும் புதுக்கோட்டை […]