முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா: பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி மற்றும் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை சாலைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி […]

பராமரிப்பு பணி… பழனி ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார். மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதால் ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.பழனி ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுவதால் பலமாக காற்று வீசுமபோது சேவை நிறுத்தப்படும். அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, […]