நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்

திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே ஊரை சேர்ந்த வாசு, ராஜு, தீனா என 4 பேர் நேற்று பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பகல் நேரத்தில் மீனவர்கள் தங்களுக்காக மதிய உணவை படகில் சமைத்துக் கொண்டிருந்தனர். இதில், எதிர்பாராத விதமாக திடீரென படகு தீப்பற்றி எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் 4 பேரும் படகிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். இதனைக்கண்ட, சக மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 […]