அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்

திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அப்போதைய அதிமுக கோட்டத் தலைவர் ஞானசேகருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேசனில் எஸ்எஸ்ஐ பணியாற்றிய ராக்கெட் ராஜேந்திரன் என்ற போலீசாரின் மனைவிதான் அந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது என தெரிய வந்தது. […]