பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் அந்த பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்விளைக்கு புறப்பட்டார். உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சித்திரைகனி நின்றவாறு பயணித்தார்.திசையன்விளைக்கு சென்றதும் பஸ்சில் இருந்து […]

போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தனது நண்பர் ரமேசுடன் சேர்ந்து மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கூத்தாநல்லூர் வெள்ளக்குடி காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரதீபன் (23) வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை அடகுகடை பங்குதாரர் ரமேஷ் தனது தம்பி அர்ஜுன் மற்றும் பிரதீபன் ஆகியோரை காரில் […]