பாகிஸ்தானில் பயங்கரம்- மனித வெடிகுண்டு தாக்குதல்-31 பேர் பலி-169 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 169 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷெஷாத் நகரில் தர்லாய் இமாம்பார்காவில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி உள்ளது. மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியை நோக்கி மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவனை காவலாளி தடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் திடீரென வெடிகுண்டை இயக்க செய்துள்ளான். இதில் பயங்கர சத்தத்துடன் […]