7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-58 வயது நபர் போக்சோவில் கைது

திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு வந்தது. அப்போது ஸ்டீபன் ராஜ் அந்த 7 வயது குழந்தையை தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அந்தகுழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது பற்றி […]

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23-ம் தேதி, 9-ம் வகுப்பு பயிலும் மாணவிக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]

மருத்துவ மாணவிக்கு கோவிலில் பாலியல் தொல்லை…டிரைவர் கைது…

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் விஜயகுமார் (48). இவர் அரசு நகர்ப்புற மேம்பாட்டு துறையில் டிரைவராக வேலை செய்கிறார். கடந்த 16-ந்தேதியன்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றிவந்தபோது அவருக்கு முன்னால் இளம்பெண் ஒருவர் தனியாக சென்று கொண்டிருந்தார். அந்த இளம் பெண்ணின் பின்பக்கமாக சென்று விஜயகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த இளம்பெண் விஜயகுமாரை கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் விஜயகுமார், அந்த இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் […]

தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவருடைய மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தொழிலாளி தனது தம்பி மனைவி மற்றும் 6 வயது மகளை மனைவிக்கு உதவியாக விட்டு சென்றார். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பவருக்கு உதவியாக ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்று விதிமுறை […]