பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகளை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் 2015-ம் ஆண்டு போராட்டம் நடந்தது.அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்கிரபாண்டியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜூக்கு மட்டும் […]