பிரதமருடன் பீகார் முதல்வர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சந்தித்து பேசினார். பீகார் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பீகாரில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியுடன் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். மோடியுடன் ஆலோசனை நடத்திய நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.
பீகார் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 15-ந்தேதி அரசு விழா ஒன்று நடந்தது. இதில் 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். விழாவில் பீகார் துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையை பெறுவதற்காக, இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தவாறு மேடையேறி வந்தார். அவரை பார்த்த நிதிஷ் குமார், முதலில் ஹிஜாப்பை விலக்குமாறு சைகை […]