புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்
சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுசின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.
புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்- காரைக்காலில் அமித்ஷா பேச்சு
காரைக்காலில் ஒன்றிய அமைச்சர் அமிதஷா பேசியதாவது… புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா; திருநள்ளாறு சனீஸ்வரர், பத்ரகாளியம்மனுக்கு தலைவணங்குகிறேன்; புதுச்சேரி புண்ணிய பூமி. உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். புதுச்சேரியில் ஊழலை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. டெல்லிக்கு அடிமையாக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து […]
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, […]
மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி
புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சித்தலைவர் குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தை அரசு […]
புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்
புதுச்சேரி: 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதி, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.
பிப்ரவரி 11-ல் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசாரப் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரியில் நடைபெற உள்ள கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதுச்சேரி […]
வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்
வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்
புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில் தங்குபவர்களின் முழு விவரங்களையும், காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவு 2 மணிக்குள் பயணிகள் தங்கும் விடுதி அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட கேளிக்கை வரி […]
புதுச்சேரி-SIR பணிக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில்1 லட்சத்து 3 ஆயிரத்து 477 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் பத்து சதவீதம் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு […]
புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுவை தனித்தனி.. விஜய் பேச்சு
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. QR குறியீடு கொண்ட நுழைவுச்சீட்டு இருந்தால் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 5 ஆயிரம் பேருக்கு மட்டும பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. விஜய் அதி நவீன சொகுசுப் பேருந்தில், மக்கள் […]
புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
புதுச்சேரி தவெக ரோடு ஷோவுக்கு காவல்துறை மறுப்பு
புதுச்சேரி- தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டிருந்த டிசம்பர் 5 அன்று புதுச்சேரியில் நடைபெற விருந்த ரோடு ஷோவுக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. கலாப்பேட்டை முதல் கண்ணியாக்கோயில் வரை அஜந்தா சிக்னல், உப்பலம், அரியங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் போன்ற இடங்களைத் தொடும் இந்த ரோடு ஷோவுக்கு தவெக புதுச்சேரி அலகு தலைவர்கள் முதல்வர் என். ரங்கசாமி மற்றும் போலீஸ் டிஜிபி […]
கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட தாலி செயின், நெக்லஸ் உள்பட சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு […]