சமயபுரம் கோவிலுக்குச் சென்று திரும்பியபோது விபத்து: அரியலூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பெண் பக்தர்கள் படுகாயம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், அரியலூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர் மற்றும் காவாளக்கடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேன் ஒன்றில் சமயபுரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். வழிபாடுகளை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் அருகே வேனின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் […]
திருச்செந்தூர் கோயிலில் பயங்கரம்: வரிசையில் நின்ற பெண்கள் குடுமிப்பிடி சண்டை – வீடியோ வைரல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தரிசன வரிசையில் நின்ற பெண் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகனின் இரண்டாம் படை வீடான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 26-ம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அப்போது பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பெண் பக்தர்களுக்கு […]