எஸ்.ஐ.ஆர் பணியால் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் – கேட்டை மூடிப் பெற்றோர்கள் மறியல்
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் சரிவர வராததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று பள்ளியின் கேட்டை இழுத்து மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே வருவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தி ஐந்து […]