புதுகை-தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் /ஊராட்சி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணாதலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்றுதுவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவபொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் வேஷ்டி,சேலைகளைவழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா, செய்தி மக்கள் தொடர்பு […]
14 லட்சம் குடும்பம் இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லை
தமிழகம் முழுவதும் இன்று நண்பகல் வரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளையும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பினை […]
5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐந்து நாட்களில் பொங்கல் பரிசு பணம் மற்றும் […]
திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்
திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் […]
திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச வேட்டி சேலை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்வில் திமுக வட்ட செயலாளர் செல்வராஜ், அருண்நேரு, காங்கிரஸ் நிர்வாகிகள் பூபாலன், […]
புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி இரயில்வேநிலையம் அருகில் கடைஎண்26ல்குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு ரொக்கம் ரூ.3000/-மற்றும் 1கிலோ பச்சைஅரிசி, 1கிலோ சர்க்கரை,கரும்பு,வேஷ்டி,சேவை ஆகியவற்றை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர் . நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத்தலைவர் அரு.வீரமணி, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் கள்வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை,துணைமேயர் எம்.லியாகத்தலி, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்தெய்வானைமற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி-சேலை ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிரமமின்றி பரிசுத்தொகுப்பு சென்றடைவதை உறுதி செய்ய, டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள 3,33,503 குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
ரூ.3000 பொங்கல் பரிசுடன் -ஜன.,8 முதல் 14 வரை விநியோகம்
பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.248 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் பொங்கல் பண்டிகை இது என்பதால், ரொக்க பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும் அதற்கான அறிவிப்பை […]
அரியலூர்-பொங்கல் பரிசு-கரும்பு தோட்டத்தினை கலெக்டர்நேரில் ஆய்வு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (03.01.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2,51,161 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.2024-2025-ம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், […]
ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை ரூ.3,000-ஆக வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.