தஞ்சை உழவர் சந்தையில் பொங்கல் பொருட்கள் அமோகம்

நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ள தைத்திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் உழவர் சந்தையில் பூ,வாழை இலை, வாழை பழம்,மஞ்சள் கொத்துகள், கரும்பு,காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பரபரப்பான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் தினமான நாளையும் (15.01.2026) விடுமுறையின்றி உழவர் சந்தை செயல்படும் என்று உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் தெரிவித்துள்ளார்.

வீடு தீப்பிடித்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி உறையூர் கீழ புது பாய்க்கார தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி வயது (45. ) இவர் குடும்பத்துடன் கல்லணைக்கு சென்றுள்ளார். அன்று மாலை அவரது மகன் தனலட்சுமியை தொடர்பு கொண்டு வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பத்தில் வீட்டிலிருந்து மின்சாதன பொருட்கள் , பேங்க் பாஸ்புக் , டிசி போன்ற ஆவணங்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து […]