கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்
கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட […]
பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு
பொள்ளாச்சிஅடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் மூன்று குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்குகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி- பிப் – 11ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான். வரையாடு. சிறுத்தை’ செந்நாய். யானை. காட்டு மாடு. கரடி .போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது இவற்றை காண்பதற்காகவும் வால்பாறை செல்வதற்காகவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி வழியாகச் சென்று வருகின்றனர் எந்த நிலையில் […]
பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை
பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலான […]
பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா மற்றும் கிருஷ்ணவேணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்றனர் இந்த நிலையில் நேற்று ஆனைமலை மாசாணி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு ராஜா வந்திருப்பதாக சந்தான கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே ராஜாவை […]
மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் இத்திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி’ பெயரையே சூட்ட வேண்டும். ஏற்கனவே […]
தபால் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொள்ளாச்சி வடுகபாளையத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கடிதப் பரிமாற்றம் மற்றும் சேமிப்புக் கணக்கு போன்ற பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பல ஆண்டுகளாக இங்குத் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் தபால் நிலையத்தை இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாலிங்கபுரம் பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அறிந்த வடுகபாளையம் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த இடமாற்றத்தைக் கண்டித்தும், தபால் நிலையம் தொடர்ந்து […]
பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை
பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பரத கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள், […]
ஆனைமலையில் நட்சத்திர அந்தஸ்து ‘டென்ட்’ விடுதிகள்: சுப்ரியா சாகு நேரில் ஆய்வு
தமிழகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேத்துமடையில் உள்ள ‘ஆனைமலையகம்’ வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய நவீன ‘டென்ட்’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை ‘ட்ரக் தமிழ்நாடு’ (TReK Tamil Nadu) மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (TFC) ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு […]
பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி மாணவர்கள் -நெகிழ்ச்சி
கோவை, பொள்ளாச்சி பல்லடம் சா லையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தங்களது பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களை கௌரவிக்கும் வகையிலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்காக படும் சிரமங்கள் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டு நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற […]
பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையை சூழ்ந்த பணி மூட்டம்
கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது மேற்கு தொடர்சி மலை பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணையின் மேல் பரப்பில் உள்ள தண்ணீரை தழுவிய படி […]