விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமம் ஜவகர் அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (40), இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு சமீப காலமாக கழுத்து வலி இருந்ததால் தனக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்று மருத்துவ சான்றிதழுடன் விடுப்பு கேட்டு சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான யுவராஜ், […]