ஆன்லைன் பைன் செல்லாது- எங்க மெஷின்ல தான் கட்டணும்- அடாவடி காவலர்

கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம் விதித்து உள்ளனர். அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்கிறேன் என்று அந்த ஓட்டுநர் கண்ணியமாகச் சொல்ல, ஆத்திரம் அடைந்த ஒரு காவலர், “வாய மூடிட்டு போடா… கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா […]