எஸ்ஐ மகனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்.. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி திருவப்பூர் குட்ஷெட் ரோடு பகுதியில் வசிக்கும் அமரர் மெய்யப்பன் சப் இன்ஸ்பெக்டர் மகன் மேனா. மோகன் இவர் இந்து முன்னணியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர். மோகன் இன்று காலை வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…புதுகையில் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் விஜயசுந்தரம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு விஜய சுந்தரத்தின் மகன் வேலு வந்துள்ளார். இதனை அடுத்து […]