மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், காரை ஓட்டி வந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்பவர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. அவரது கவனக்குறைவாலும் […]