ரூ.10 கோடி செலுத்த கூடுதல் அவகாசம் கேட்ட நடிகர் விஷால் மனு தள்ளுபடி

லைகா நிறுவனத்துக்கான கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில், நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த, அவகாசம் வழங்கக் கோரி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் […]