சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய சாரல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான மலைச்சாலையில், ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் கூக்கால், குண்டுபட்டி, பழம்புத்தூர், புதுபுத்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் […]