செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி
தமிழகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செவிலியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது… கொரோனா காலக்கட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிகச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக […]