சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் இலக்கான “2026 மார்ச் மாதத்திற்குள் நக்ஸல் அற்ற இந்தியா” என்ற திட்டத்தின் கீழ், கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை […]