தஞ்சை பெரிய கோவில் ஆருத்ரா தரிசனம்-4 ராஜவீதியில் வீதியுலா நடராஜ பெருமான்

தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம் 4 ராஜ வீதிகளில் வீதியுலாவந்த நடராஜ பெருமான்மும்மாரி மழை பொழிய நெல்மணிகளை தூவி வழிபாடு நடத்திய பக்தர்கள். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் […]

”நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்.. புதுகை கலெக்டர் பார்வை

புதுக்கோட்டை ஊராட்சி செயின்ட்மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின் ” உயர் மருத்துவ சேவைமுகாமினைஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் சுகாதார அலுவலர் மரு.எஸ்.ராம்கணேஷ், புதுக்கோட்டை மாநகர் நல அலுவலர் மரு.காயத்திரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் திருநங்கை களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மு.அருணாதலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் மே.சியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.