வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என பெயர் சூட்டி பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்கள் முன் பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார்… வடநாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார். எந்தவிதத்தில் தாழ்ந்தவர் என்று கேட்டார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் […]
காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் […]
மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு […]
ஆட்சியில் பங்கு ஒத்து வராது- காங்கிரஸ்-க்கும் தெரியும்-முதல்வர் ஸ்டாலின்
ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் […]
இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்
இளைஞர்களைக் கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம்! இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும் அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த […]
அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் […]
பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… முதல்வர் ஸ்டாலின்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளான மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி (₹3,548 கோடி) மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. “இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என முதலமைச்சர் எச்சரித்துள்ளார். தமிழக அரசு ‘தேசிய கல்விக் கொள்கை’ மற்றும் ‘மூன்று மொழிக் கொள்கையை’ ஏற்காததால், கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி […]
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி […]